Horticulture

Thursday, 05 August 2021 08:38 PM , by: Elavarse Sivakumar

தொடர் மழை பெய்து வருவதால், விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வாழை சாகுபடி (Banana cultivation)

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, அர்ச்சுனாபுரம், கான்சாபுரம், அத்தி கோவில், கூமாபட்டி, கிழவன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.

நிரம்பிய நீர்நிலைகள் 

இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. அவ்வாறு பெய்த தொடர் மழை காரணமாக கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.

கிணறுகளில் தண்ணீர் (Water in wells)

அதேபோல கிணறுகளிலும் போதியத் தண்ணீர் இருப்பதால் தற்போது இப்பகுதியில் விவசாயிகள் வாழையை ஆர்வத்துடன் சாகுபடிப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

உரமிடும் பணி (Fertilizing work)

தற்போது வாழைக்கு விவசாயிகள் உரமிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாகவும், இந்த ஆண்டு கோடையில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும் நீர்நிலைகள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் போதுமான அளவு இருக்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டும் வாழையைப் பயிரிட்டு விவசாயப் பணியினை மேற்கொண்டு உள்ளோம்.

எதிர்பார்ப்பு (Anticipation)

இன்னும் சில மாதங்களில் வாழை பூ எடுத்து குழையிடும் பருவத்தில் இருப்பதால் தற்போது உரமிடும் பணி நடந்து வருகிறது.

விலை இல்லை (No price)

இருப்பினும் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வாழை இலையின் விற்பனை போதிய வருமானத்தை ஈட்டவில்லை. இதனால் நாங்கள் வேதனையுடன் உள்ளோம்.
வாழைத்தார் மூலம் இந்த ஆண்டு போதிய லாபம் ஈட்ட முடியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க...

பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)