Horticulture

Thursday, 11 February 2021 10:51 AM , by: Elavarse Sivakumar

Credit : Wikiwand

நீர் பாசன கருவிகளை இலவசமாக பெறுவதற்கு, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.

சாகுபடி (Cultivation)

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்தில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல், வேர்க்கடலை கரும்பு, சிறுதானியம், சவுக்கு, காய்கறி போன்ற பயிர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சிறு, குறு விவசாயிகளுக்கு, எளிய முறையில் நீர் பாசனம் செய்வதற்கான கருவிகள் வேளாண் துறையின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது

இது குறித்து திருத்தணி வேளாண் துறை அதிகாரி ஏழுமலை கூறியதாவது:

இலவச கருவிகள் (Free tools)

நுண்ணுயீர் பாசன திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு தெளிப்பு நீர், மழை துவோன் போன்ற, ரூ.36,000 மதிப்பிலான நீர் பாசன கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க அழைப்பு (Call to apply)

இதைப் பெற விரும்பும் விவசாயிகள், உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

தங்களது குடும்ப அடையாள அட்டை (Ration Card), ஆதார் கார்டு, சிறு, குறு விவசாயி சான்றுக்கான கணினி சிட்டா, அடங்கல், நில வரைப்படம் மற்றும் இரண்டு புகைப்படம் போன்ற ஆவணங்களுடன், அந்தந்த பகுதி வேளாண் உதவி அலுவலர்கள் அல்லது திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

வீட்டுவாடகை செலுத்தினால் ரூ.1000 கேஷ் பேக்- Paytm மின் சிறப்பு சலுகை!

தொடர் மழை எதிரொலி-உப்பு விலை உயரும் அபாயம்!

சூரிய மின்வேலி அமைக்க 50% மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)