மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 May, 2021 9:10 AM IST
Credit : Dailythanthi

கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்குக் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைத் தட்டுப்பாடு இன்றி, கிடைக்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அமலில் ஊரடங்கு  (Curfew in effect)

தமிழகத்தில் கொரோனாப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, பரவலைத் தடுக்க ஏதுவாக, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்டவை அமலில் உள்ளன.

நண்பகல்12 மணி வரை (Until 12 noon)

இதைத்தவிர மே 6ம் தேதி முதல் பல்வேறுக் கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

கடைகளில் கூட்டம் (Crowd in stores)

குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமேக் காய்கறிகள், பழங்கள் மற்றும் பலசரக்குப் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என்பதால், இந்த நேரத்தில், கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

தோட்டக்கலைத்துறை நடவடிக்கை (Horticultural activity)

இதன் காரணமாக, அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை உயர வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்டங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை வழக்கம்போல் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பத் தோட்டக்கலைத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிகாரிகளுக்கு உத்தரவு (Order to the authorities)

விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் இணைந்து, இப்பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும், உள்ள தோட்டகலை அலுவலர், தோட்டக்கலை உதவி அலுவலர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல இப்பணிகளைக் கண்காணிக்கவும், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க...

வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!

மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!

English Summary: Free supply of vegetables and fruits - Horticulture Information!
Published on: 07 May 2021, 09:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now