மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 September, 2020 11:57 AM IST
Credit : Vikaspedia

விவசாயிகள் அரும்பாடுபட்டு வளர்க்கும் செடிகளுக்கு மிகப்பெரிய எதிரியே பூச்சிகள்தான்.
இதனால் பூச்சி மேலாண்மை என்பது சாகுபடியின் முக்கியத்துவம் பெறுகிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பல பூச்சிக்கொல்லிகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும், மண்ணிற்கும், மனிதனுக்கும் நஞ்சில்லாதது எதுவென்றால், இயற்கை பூச்சிக்கொல்லிதான்.

அந்த வகையில், செடிகளில் புழு வகைப் பூச்சிகளை முற்றிலும் கட்டுப்படுத்தப் பயன்படும் இயற்கை பூச்சிக்கொல்லிகளில் ஒன்று, இஞ்சி-பூண்டு-மிளகாய் கரைசல்.

தேவையான பொருட்கள் (Ingredients)

பூண்டு -1கிலோ
பச்சை மிளகாய் - அரை கிலோ
இஞ்சி - அரை கிலோ
மண்ணெண்ணெய் - தேவையான அளவு

தயாரிப்பு முறை (Preparation)

  • பூண்டு ஒரு கிலோ எடுத்து மண்ணெண்ணெயில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 
  • பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைக்கொள்ளவும்.

  • அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

  • பின்னர் இவை அனைத்தையும் நன்கு கலந்து, ஒரு காடாத்துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். (ஜிலேபி பிழிவது போல் வைத்துக்கொள்ளவும்)

  • இவ்வாறு தயார் செய்த காடாத்துணிக் கலவையை 6 லிட்டர் தண்ணீரில் முக்கி, ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.

  • இந்தக் கரைசலை பூச்சித்தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியை 9.5 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளிக்க வேண்டும்.

  • தாக்குதல் அதிகமாக இருந்தால்,ஒரு லிட்டர் எடுத்து, 9 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகள் மீது தெளித்தால், புழு வகைப் பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படும்.

  • இதைத்தொடர்ந்து காதி சோப்பைத் தண்ணீரில் கரைத்து அடித்தால், அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலைச் செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும். இதன் மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.

  • இதை தயார் செய்யும்போது கையுறை அணிய வேண்டியது கட்டாயம்.

  • கை எரிச்சல் அதிகமாக இருக்கும் என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

  • மேலும் படிக்க...

நெல் பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோய் - கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!

தண்டுப்புழுக்களைத் தெறிக்க விடும் அக்னி அஸ்திரம்- தெரியுமா உங்களுக்கு!

English Summary: Ginger-Garlic-Chili Solution - How to make Powdery mildew
Published on: 11 September 2020, 11:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now