மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 November, 2020 9:07 AM IST
Credit :

இலைப் புள்ளி நோய் பாதிப்புக்குள்ளான மஞ்சள் பயிரில் இலைகளை அகற்றி தீயிட்டு அழிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டாரத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக மஞ்சள் பயிரில் இலைப் புள்ளி, கருகல் நோய் ஆங்காங்கே பரவலாகத் தென்படுகிறது.

இதையடுத்து, பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய நோயியல் வல்லுநர் சங்கீதா பனிகர், தோட்டக்கலைத் துணை இயக்குநர் தமிழ்செல்வி, கொடுமுடி வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் ப. பிருந்தா ஆகியோர் வயல்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். அப்போது, நோயால் பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றி தீயில் போட்டு அழிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மேங்கோசெப் 0.3 சதவீதம் (லிட்டருக்கு 3 கிராம்) அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு 0.3 சதவீதம் (லிட்டருக்கு 3 கிராம்)வீதம் 15 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து 3 அல்லது 4 முறை தெளித்து இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் படிக்க...

ஈஷாவின் சிறப்பு சேவை- சிறைக் கைதிகளிடத்தில் பரிவு!

மீன் வளர்க்க காசு - வாங்க நீங்க ரெடியா!

English Summary: Leaf spot disease in turmeric - what to do to protect?
Published on: 22 November 2020, 08:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now