1. செய்திகள்

ஈஷாவின் சிறப்பு சேவை- சிறைக் கைதிகளிடத்தில் பரிவு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Yoga training for 12 thousand prisoners - Isha's special service during the Corona period!

கொரோனா வைரஸ் பாதிப்பு மிகுந்த இக்கட்டான சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஈஷா அறக்கட்டளை சார்பில்  ஆன்லைன் மூலம் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த யோகா வகுப்புகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம் கடலூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் மத்திய சிறைச்சாலைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலைகளில் கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்பட்டது.

கைதிகளுக்கு யோகா? (Yoga for Inmates)

இதில் 8,165ஆண் கைதிகள், 3453 பெண் கைதிகள், 3,018 ஆண் ஊழியர்கள், 950 பெண் ஊழியர்கள் உட்பட மொத்தம் 15,529 பங்கேற்று பயனடைந்தனர். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நுரையீரல் திறனை அதிகரிப்பதற்காக சிம்ம கரியா என்ற பயிற்சியும், உடல் மற்றும் மனதளவில் அமைதியாகவும் சமநிலையாகவும் இருப்பதற்காக யோக நமஸ்காரம், காஷா கரியாஆகிய பயிற்சிகளை ஈஷயாவின் யோகா ஆசிரியர்கள் கற்றுத்தந்தனர். 

அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன் தனித் தனிக் குழுக்களாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 28 ஆண்டுகளாக இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

மண் பரிசோதனை ஏன் அவசியம்?

பாழ்பட்ட நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றும் 20 வகை விதைகள்!

English Summary: Yoga training for 12 thousand prisoners - Isha's special service during the Corona period! Published on: 29 October 2020, 06:27 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.