சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 12 February, 2021 11:26 AM IST
Organic Farming Training for Horticulture Extension Staff!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் மற்றும் புதுக்கோட்டையின் சமிதி குடுமியான்மலையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அங்கக வேளாண்மை பயிற்சி தொடங்கியுள்ளது.

6 நாட்கள் பயிற்சி (6 days training)

இந்தப் பயிற்சி இரண்டு குழுக்களாகப் பிரித்து ஆறு நாட்களுக்கு (08 - 13 பிப்ரவரி 2021) நடத்தப்படுகிறது.

சந்தைப்படுத்துதலின் அவசியம் (The need for marketing)

இதில் பங்கேற்ற பயிர் மேலாண்மைத்துறை இயக்குநர் முனைவர். வெ. கீதாலட்சுமி, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் அங்கக வேளாண்மையின் முக்கிய உத்திகள், விவசாயிகளின் பங்களிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.

மண்வளம் (Soil)

இதேபோல் வளங்குன்றா அங்கக வேளாண்மை துறை தலைவர் முனைவர். செ. மாணிக்கம், அங்கக தொழில்நுட்பக் கருத்துக்களை விவசாயிகளிடம் சென்று சேர்க்க வேண்டியதன் அவசியம்,  மண்வளம் மற்றும் நச்சு இல்லா உணவு உற்பத்திக்கு வழிவகை செய்தல் குறித்து அறிவுறுத்தினார். 

உழவியல் துறைத்தலைவர் முனைவர். சி. ஆர். சின்னமுத்து, மருந்தில்லா களை மேலாண்மை மற்றும் நானோ தொழில்நுட்ப முறையில் களைகளை கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றி எடுத்துரைத்து ஒரு குழுவினருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இப்பயிற்சியில் அங்கக முறையில் சத்து மேலாண்மை, களை மேலாண்மை, மட்கு உரம், மண்புழு உரம் தயாரித்தல், அங்கக முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அங்கக சான்றிதழ் மற்றும் பங்கேற்பாளர்கள் உறுதியளிப்புத் திட்டம் ஆகியவற்றை செயல்விளக்கத்துடன் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

தோட்டக்கலை இயக்குநர்கள் (Directors of Horticulture)

இதில் அங்கக வேளாண்மையில் வெற்றி கண்ட விவசாயிகளின் வயல்வெளிப் பார்வையிடுதலும் கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 60 உதவி வேளாண் தோட்டக்கலை இயக்குநர்கள், தோட்டக்கலை அதிகாரிகள் மற்றும் உதவி தோட்டக்கலை அதிகாரிகள் பங்கேற்று பயனடைந்தார்கள்.

மேலும் படிக்க...

மா மரங்களைத் தாக்கும் கற்றாழைப்பூச்சி- பாதுகாக்க யோசனை!

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!

நெல் அறுவடை இயந்திர வாடகை உயர்வு - சிக்கலில் விவசாயிகள்!

English Summary: Organic Farming Training for Horticulture Extension Staff!
Published on: 12 February 2021, 11:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now