Horticulture

Sunday, 06 June 2021 07:19 AM , by: Elavarse Sivakumar

Credit: Tamilseithi

விருதுநகர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைப் பருவத்தில் இருப்பதால், உடனடியாக அறுவடை செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

4,500 எக்டேரில்  சாகுபடி  (Cultivated on 4,500 hectares)

விருதுநகர் மாவட்டத்தில் சில இடங்களில், விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ளது. குறிப்பாக இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டாரங்களில் கோடை பருவத்தில் நெற் பயிர்கள் சுமார் 4,500 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அறுவடைக்குத் தயார் (Ready to harvest)

அவை நன்கு வளர்ந்து, தற்போது இப்பயிர்கள் அறுவடை பருவத்தில் உள்ளதால், விவசாயிகள் அறுவடை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல் கொள்முதல் நிலையங்கள் (Paddy Procurement Stations)

கோடைப் பருவ நெல் சாகுபடியைக் கருத்தில் கொண்டு, விவசாயிடமிருந்து நெல்கொள்முதல் செய்ய ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் (நெல் கொள்முதல்)

இதன்படி தேவதானம், சேத்தூர் கம்மாபட்டி, இராமசாமியாபும், கான்சாபுரம், வத்திராயிருப்பு ஆகிய ஆறு இடங்களில் 31.05.2021 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

மழைக்கு வாய்ப்பு (Chance of rain)

தற்போது விருதுநகர் மாவட்ட எல்லைப் பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தென்மேற்கு பருவ மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் அறிவுறுத்தல் (Instruction of officers)

எனவே விவசாயிகள் அனைவரும் தாங்கள் பயிரிட்டுள்ள அறுவடை பருவத்தில் உள்ள நெற் பயிர்களை விரைந்து அறுவடை செய்து, சேதத்தினை தவிர்த்திடுமாறு விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ச.உத்தண்டராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!

அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)