1. தோட்டக்கலை

மானிய விலையில் நுண்ணீர் பாசனக் கருவிகள்-புதுக்கோட்டை விவசாயிகளுக்கு அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit : Joom

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நீர்ப்பாசனக் கருவிகள் வழங்கப் படுவதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் ந.உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அதிகப் பரப்பில் பாசனம் (Large area irrigation)

நுண்ணீர் பாசன முறையில் குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக அளவுப் பரப்பில் சாகுபடி செய்யலாம்.

நீர் விரயமாவது குறையும் (Water wastage will be reduced)

இதனால் நீர் விரயமாவது குறைவதோடு பயிருக்குத் தேவையான நீர் நேரடியாகப் பயிரின் வேர்ப் பகுதிக்குச் செல்வதால் பயிர் நன்கு செழித்து வளர்ந்து அதிக விளைச்சல் கொடுப்பதோடு களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது.

நேரமும் செலவும் குறைகிறது (Time and cost are reduced)

நுண்ணீர் முறையில் நீர்ப்பாசனம் செய்வதற்கான நேரமும் செலவும் குறைகிறது.

ஊட்டச்சத்து (Nutrition)

  • சொட்டு நீர்ப்பாசனம் மூலம் உரமிடுவதால் பயிருக்குத் தேவையான நீரும் ஊட்டச்சத்துக்களும், சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் கிடைக்கப் பெறுகிறது.

  • மேலும் நீர் மற்றும் உரங்கள் வீணாவது தடுக்கப்படுவதோடு அவற்றின் பயன்பாட்டுத் திறனும் அதிகரிக்கிறது.

பாசனக் கருவிகள் (Irrigation equipment)

  • பயறு வகைப் பயிர்களுக்குத் தெளிப்பு அல்லது மழைத்தூவான் போன்ற நுண்ணீர் பாசனக் கருவிகளும், மக்காச்சோளம், கரும்பு, தென்னை போன்ற பயிர்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளும் நிறுவிடலாம்.

  • பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியின் உதவி வேளாண்மை அலுவலர்களிடம் கணினிச் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, நில வரைபடம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர்ப் பரிசோதனைச் சான்று, சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான சான்று போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

இதன் மூலம் நுண்ணீர் பாசனக் கருவிகளை அமைத்து பயனடையுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!

கட்டுப்பாடுகளுடன் உர விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதி!

English Summary: Micro Irrigation Equipment at Subsidized Prices - Pudukottai Farmers Call! Published on: 04 June 2021, 10:56 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.