மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 November, 2020 7:10 AM IST

நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை (Instructions) வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  • குருத்துப் பூச்சிகளை கட்டுப்படுத்த நடவு செய்யும் போது நாற்றில் முட்டைக் குவியல்கள் உள்ள இலைகளின் நுனியை கிள்ளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

  • பாக்டீரியா இலைக் கருகல் நோய் இருப்பது தென்பட்டால் அந்த தருணத்தில் நுனியை கிள்ளுவது நல்ல முறை அல்ல. இதனைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம்.

  • ஓர் ஏக்கருக்கு 20 - 25 பறவை குடில்கள் அமைக் வேண்டும்.

  • சூரிய வெளிச்சத்தில் இயங்கக்கூடிய தானியங்கி விளக்கு பொறியை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

  • இதேபோல் இனக்கவர்ச்சிப் பொறி வைத்தும், ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

  • இனக்கவர்ச்சிப் பொறிகளின் குப்பிகளை அவ்வப் போது மாற்றி அதன் தாக்குதலை குறைக்கலாம்.

  • டிரைக்கோ கிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 2 சிசி என்ற அளவில் நடவு நட்ட 30 மற்றும் 37வது நாள் (Day) வெளியிட வேண்டும்.

  • பொருளாதார சேத நிலையை தாண்டும் பட்சத்தில், ஒரு ஹெக்டேருக்கு கார்ட்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 % எஸ்.பி 1000 கிராம் அல்லது ஃப்ளூபெண்டியாமைடு 39.35% எஸ்.சி. 50 கிராம் அல்லது குளோர்பைரிபோஸ் 20% இ சி 1250 மில்லி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகிக்கலாம்

இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க...

மக்காச்சோளத்திற்கு காப்பீடு செய்ய அழைப்பு- விவசாயிகள் கவனத்திற்கு!

விலை மதிப்பற்றது வெங்காயம் - ஏன் தெரியுமா?

English Summary: Pest-bite control methods that attack rice!
Published on: 03 November 2020, 06:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now