Horticulture

Thursday, 14 April 2022 11:25 AM , by: Poonguzhali R

Potatoes Profitable Up to Rs 25 Crore!

நாட்டின் பொருளாதார அடிப்படை என்பது விவசாயத்தை மையமிட்டு இருக்கின்றது.  அந்த விவசாயத்தையே நம்பி தன் வாழ்வாதாரத்தை நடத்தக் கூடிய நிலையில் பலர் உள்ளனர்.  பொதுவாக, விவசாயத்தில் ஒவ்வொரு பயிரை விதைப்பதற்கு என்று ஒவ்வொரு கால நிலை இருக்கின்றது.  அதே போல குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தைப் பெறும் பயிர்களை விளைவிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். 

பொதுவாக உருளைக் கிழங்கு என்பது மாவுச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.  அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடி உருளை ஆகும்.  இன்றைய நாட்டின் பெரும்பகுதி உருளையின் தாயகம் எனப்படுகிறது. 

கிழங்கு வகைகளில் பல வகைகள் உள்ளன.  அரோட்டுக் கிழங்கு, ஆட்டுக்கால் கிழங்கு, இஞ்சி, இராசவள்ளிக் கிழங்கு, கப்பைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக் கிழங்கு, கொய்லாக் கிழங்கு, கொட்டிக் கிழங்கு, கோகிலாக் கிழங்கு, கோசுக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, சேனைக் கிழங்கு, தாமரைக் கிழங்கு, பனங்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, மாகாளிக் கிழங்கு, மோதவள்ளிக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு முதலான பல வகைகள் இருக்கின்றன.

உருளைக் கிழங்கு வகைகளில் லேடி ரொசெட்டா என்ற சிறப்பு வகை உருளைக் கிழங்கு உள்ளது.  இதனைப் பயிரிடுவதன் மூலம் அதிக லாபத்தைப் பெறலாம்.  இவை பொதுவாக சிப்ஸ்கள், வேஃபர்கள் முதலான பொருட்கள் செய்யப் பயன்படுகின்றன.  இவற்றின் தேவையும் சந்தையில் அதிகமாக உள்ளது.  இந்நிலையில் இது போன்ற தேவை இருக்கின்ற பயிர்களையும், கிழங்குகளையும் பயிரிடுவதன் மூலம் விவசாயத்தில் அதிக லாபத்தினைப் பெறலாம்.

அகமதாபாத்தைச் சேர்ந்த ஜித்தேஷ் படேல் என்ற விவசாயி இந்த லேடி ரொசெட்டா எனும் சிறப்பு வகை கிழங்கினை மட்டுமே தன் தோட்டத்தில் பயிர் செய்து வருகிறார்.  இவர் ஆண்டு ஒன்றுக்கு ரூ.25 கோடி வருவாய் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

மேலும் படிக்க...

உருளைக் கிழங்கை நீண்ட நாள் பராமரிக்கும் யுக்திகள்!

உருளைக்கிழங்கை உங்கள் வீட்டு மாடியிலும் வளர்க்கலாம் - சாகுபடிக்கான யுக்திகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)