மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 November, 2021 11:07 AM IST
Credit : Vikatan

தொடர் மழையால் வாழைச் சாகுபடியில் ஏற்பட்டுள்ள உரஇழப்பை எவ்வாறுத் தவிர்ப்பது என்பது குறித்து திருச்சி வாழை ஆராய்ச்சி மையம் யோசனை தெரிவித்துள்ளது.

கனமழை (Heavy rain)

வடகிழக்குப் பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவானக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வாழைச் சாகுபடி செய்யப்படும் பெருவாரியான வாழைத்தோட்டங்களில் மழைநீர் தேங்கி நிற்க வாய்ப்புள்ளது.

வீணாகும் உரம் (Wasted compost)

  • இந்த மழை நீரை தோட்டங்களிலிருந்து வடிக்கும் பொழுது, இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணையாக இடப்பட்டுள்ள பொட்டாஷ் உரம் தண்ணீரில் கரைந்து வீணாகிறது.

  • இதனால், வாழைக்குத் தேவையான பொட்டாஷ் உரம் சரிவர கிடைக்காமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

  • இதனால், வாழையில் 20 முதல் 25 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படலாம்.

    இதனைத் தவிர்ப்பதற்கு, பருவமழை நின்ற உடன், மரம் ஒன்றுக்கு 100 கிராம் யூரியா, 150 கிராம் மூரியேட் ஆப் பொட்டாஷ் மற்றும் 100 கிராம் டோலமைட் (கால்சியம் - மக்னீசியம் கார்பனேட்) உரங்களை மண்ணில் இடவேண்டும்.

  • மேலும், இலை வழியூட்டமாக, 1 சத பொட்டாஷியம் நைட்ரேட் கரைசலையும் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம்), 1 சத கால்சியம் நைட்ரேட்டையும் (ஒரு லிட்டர் தண்ணீருக்கும் 10 கிராம்) இலைமேல் தெளிக்க வேண்டும்.

  • மேலும், வாழைக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் நுண்ணூட்டச் சத்துக்குகளும், மழை நீரைத், தோட்டங்களிலிருந்து வடிக்கும் பொழுது வீணாக வாய்ப்புள்ளது.

நுண்ணூட்டச் சத்துக்கள் (Micronutrients)

  • இந்த இழப்புகளைச் சரிக்கட்ட, வாழைக்கு நுண்ணூட்டச் சத்துக்கள் இடுவது மிகவும் அவசியம்.

  • இதற்கு, திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின், வாழை நுண்ணுட்டக் கலவையான ‘பனானா சக்தி’-யை இரண்டு சத கரைசலாக (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம்) இலைமேல் தெளிக்கவும்.

  • ஒரு கிலோ பனானா சக்தி நுண்ணூட்ட உரத்தின் விலை ரூ.150 ஆகும்.

அதிக மகசூல் (High yield)

ஆகவே, வாழைச் சாகுபடியில் அதிக பருவமழைப் பொழிவினால் ஏற்பட்டுள்ள இத்தகைய பொட்டாஷ் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் இழப்புகளை, மேற்குறிப்பிட்ட முறையில் நிவர்த்தி செய்து, விவசாயிகள் அதிக மகசூல் பெற்றுப் பயனடையலாம்.

இவ்வாறு திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் பால.பத்மநாபன் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

மேலும் படிக்க...

பட்டுப்புழு வளர்க்க விருப்பமா?கருவிகள் வாங்க ரூ.52,500 வரை மானியம்!

புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

English Summary: Rainy season fertilizer management in banana cultivation!
Published on: 16 November 2021, 10:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now