மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 February, 2021 4:35 PM IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், கலப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விஞ்ஞானிகள் பங்கேற்பு (Participation of scientists)

பூச்சியியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில், வேளாண் விஞ்ஞானிகள்,  கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தமிழக வேளாண் துறையைச் சேர்ந்த உயர்நிலை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனை வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் நீ.குமார் துவக்கி வைத்து பேசினார். அப்போது, பூச்சியியல் காரணமாக அதிகரித்து வரும் பிரச்னைகளின் பின்னணியில், பூச்சிக்கொல்லிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்துவதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.

பயிர் பாதுகாப்பு விஞ்ஞானிகள் (Crop protection scientists)

இந்த ஆலோசனையில் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் கீ.செ. சுப்பிரமணியன், பயிர் பாதுகாப்புத்துறை இயக்குநர் முனைவர் பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டு, 150க்கும் மேற்பட்ட பயிர் பாதுகாப்பு விஞ்ஞானிகள் ஆன்லைன் மூலம் உரையாற்றினர்.

தோட்டக்கலைத்துறை இயக்குநர் முனைவர் என். சுப்பையன் பங்கேற்று, தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துவதில், வேளாண் பல்கலைக்கழகத்தால் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டியதுடன், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் அபாயங்களுக்குத் தீர்வு கண்டு விவசாயிகளுக்கு உதவுமாறும் வலியுறுத்தினார்.

இந்திய மேயானர் ஆராய்ச்சிக் கழகம், திட்ட ஒருங்கிணைப்பாளர், முனைவர் கி.கு.ஷர்மா பேசுகையில், தேசிய அளவிலான கண்காணிப்பு முறைகள் மற்றும் சேர்க்கை தயாரிப்புகள் பற்றிய சீரான பார்வையின் அவசியம் குறித்து விளக்கினார்.

மேலும் படிக்க...

கோடைகாலத்தில் பயிரிட உகந்த பயிர்கள் எவை?

பிஎம் கிசான் திட்டம் 2 ஆண்டுகள் நிறைவு! - விவசாயிகளின் உறுதிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

விவசாயத்தில் கவனம் செலுத்தும் தமிழக அரசு! - இடைக்கால பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.11,982 கோடி நிதி ஒதுக்கீடு!!

English Summary: Risks of Using Mixed Pesticides!
Published on: 25 February 2021, 04:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now