மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 January, 2021 12:03 PM IST
Crediti : Dinamalar

கோவையில் 1000 சதுர மீட்டரில் பசுமைக்குடில் அமைக்க, ரூ. 4.67 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், சூலுார் உள்ளிட்ட பகுதிகளில் பசுமை குடில் அமைத்தல், சிப்பம் கட்டும் அறை கட்டுதல், பண்ணை குட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.

இப்பணிகளுக்கான மானியம் வழங்க ஏதுவாக, பணிகள் முடிந்த பசுமை குடில், பண்ணைக்குட்டை உள்ளிட்டவைகளை, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர், வேளாண் பல்கலை பேராசிரியர் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்தனர்.

ரூ.4.67லட்சம் மானியம் (Rs.4.67 Subsidy)

அப்போது பேசிய தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி,
தோட்டக்கலைத்துறை மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், 1000 சதுர மீட்டர், பசுமைக்குடில் அமைக்க, ரூ. 4,67 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

அதேபோல், 600 சதுர அடியில் சிப்பம் கட்டும் அறை கட்ட, ரூ. 2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. அனைத்து தொழில்நுட்பங்கள், சாகுபடி முறை குறித்தும் விவசாயிகளுக்கு அலுவலர்கள் பயிற்சி அளிப்பர்,'' என்றார்.

இந்த ஆய்வில் வேளாண் பல்கலை பேராசிரியர் ராமர், சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி மற்றும் களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க...

வேளாண் சட்டங்களை மாநில அரசுகளுக்கு பரிந்துரையாக அளிக்கலாம் –ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்!

10 கட்டப் பேச்சும் தோல்வி- அடுத்த பேச்சுவார்த்தை 22ம் தேதி!

நிவாரணம் கோரி 22ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம்- பி.ஆர். பாண்டியன் தகவல்!

English Summary: Rs 4.67 lakh subsidy to set up greenhouse - Call to farmers
Published on: 21 January 2021, 11:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now