Horticulture

Monday, 17 May 2021 06:59 AM , by: Elavarse Sivakumar

Credit : Vikatan

கொரோனாப் பொது முடக்கத்தால், நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து வெளியிடங்களுக்கு உப்பு ஏற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

உப்பு உற்பத்தி (Salt production)

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட இடங்களில் சுமார் 6,000 ஏக்கர் பரப்பில் உப்பளங்களில் உணவு மற்றும் தொழிற்சாலைகளின் தேவைக்காக உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இப்பணியில், 2 தனியார் நிறுவனங்கள் உட்பட சிறு, குறு உற்பத்தியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

சாதகமான வெப்பநிலை (Favorable temperature)

நடப்பாண்டு உப்பு உற்பத்தி பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கிய நிலையில், தற்போது நிலவிவரும் கடுமையான வெயில் உப்பு உற்பத்திக்கு சாதகமாக உள்ளது. இதனால், அதிகமாக உற்பத்தியாகும் உப்பை வாரும் பணித் தீவிரமடைந்துள்ளது.

கொரோனாவால் பாதிப்பு (Damage by corona)

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதன் காரணமாக உற்பத்தி பணிகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் உப்பு வாரும் பணிகள் நடைபெறு கின்றன.

லாரிப் போக்குவரத்து (Lorry transport)

மேலும், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொது முடக்கத்தால் லாரிகள் போக்குவரத்துத் தடைபட்டுள்ளது. இதனால், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு உப்பு ஏற்றும் பணி முழுமையாகத் தடைப்பட்டுள்ளது.

கடந்த முறை (Last time)

கடந்த ஆண்டில் நடைமுறையில் இருந்த பொது முடக்கத்தின் போது சில நாள்கள் தடைபட்ட உப்பு உற்பத்தி, அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருப்பதால் நிபந்தனைகளுடனான விலக்கு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நாகை மாவட்ட எல்லைகளில் சிறப்புச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு உப்பு ஏற்ற லாரிகள் அனுமதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

கடலூரில் விதை பரிசோதனை திட்ட பணிகள் ஆய்வு! அதிக மகசூலுக்கு விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்!

சீசன் இல்லாத காலத்தில் மல்லிகைப்பூ பூக்க ஆலோசனை வழங்குகிறது வேளாண் துறை! குறைந்த செலவில் அதிக இலாபம்!

மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)