Horticulture

Monday, 08 November 2021 04:04 PM , by: T. Vigneshwaran

50% subsidy for horticultural crops

பாரம்பரிய விவசாயத்தில் அதிக ஆபத்து மற்றும் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஹரியானா அரசு இப்போது தோட்டக்கலை பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. எனவே, பல்வேறு பழங்களின் புதிய பழத்தோட்டங்களை நடவு செய்ய விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தோட்டக்கலையை பின்பற்றி அதிக லாபம் ஈட்டலாம். பலன்களைப் பெற, விவசாயிகள் தங்கள் நிலத்தின் விவரங்களை மேரி ஃபசல் மேரா பயோரா போர்ட்டலில் கொடுக்க வேண்டும். மொத்த பரப்பளவு மற்றும் வங்கி விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் தோட்டக்கலையில் அவர்களை ஊக்குவிக்கவும் தோட்டக்கலைத் துறையின் மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஹரியானா அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கொய்யா தோட்டம் நடுவதற்கு 11,500 ரூபாயும், எலுமிச்சை தோட்டத்திற்கு 12 ஆயிரம் ரூபாயும், நெல்லிக்காய் தோட்டத்திற்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாயும் மானியமாக அரசால் வழங்கப்படுகிறது. அதேபோல், சப்போட்டா சாகுபடிக்கு, ஏக்கருக்கு, 9080 ரூபாயும், மா தோட்டத்திற்கு, 5,100 ரூபாயும், மானியமாக வழங்கப்படும்.

எத்தனை ஏக்கருக்கு உதவி கிடைக்கும்?- How many acres will help?

இந்த மானியத் திட்டத்தின் கீழ், ஒரு விவசாயி அதிகபட்சம் 10 ஏக்கர் வரை பழத்தோட்டம் பயிரிடலாம். 10 ஏக்கர் அடிப்படையில் அவருக்கு அரசு நிதியுதவியும் வழங்கப்படும். தோட்டக்கலை பயிர்களுக்கு நிதி உதவி பெற விரும்பும் விவசாயிகள் அவர்களது நில ஆவணங்கள், வங்கி நகல் மற்றும் ஆதார் அட்டையுடன் சேர்த்து தங்கள் மாவட்ட தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

தோட்டக்கலைக்கு நிதி உதவி பெறுவது எப்படி?- How to get financial assistance for horticulture?

ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின்படி 2021ஆம் நிதியாண்டில் கொய்யா, நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சைத் தோட்டங்களை பயிரிட்ட விவசாயிகளும் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தோட்டக்கலை இணையதளத்தில் (hortharyanaschemes.in) ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தரப்படும் மானியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், வங்கி நகல் மற்றும் ஆதார் அட்டையுடன் மாவட்ட தோட்டக்கலை அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

தோட்டக்கலை காப்பீட்டு திட்டத்தின் பலன்கள்- Benefits of the Horticulture Insurance Scheme

இயற்கை பேரிடர்களால் ஏற்படும் தோட்டக்கலை பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை ஈடுகட்ட, விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் தோட்டக்கலை காப்பீட்டுத் திட்டம் (முக்யமந்திரி பக்வானி பீமா யோஜனா) அரசால் செய்யப்படுகிறது. இதன் கீழ், இயற்கை சீற்றங்களால் காய்கறிகள் மற்றும்  பருப்பு வகைப் பயிர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரமும், பழங்கள் நஷ்டம் ஏற்பட்டால் ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் காய்கறி மற்றும் பருப்பு வகை பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையாக 750 ரூபாயும், பழப் பயிர்களின் காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 1000 ரூபாயும் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க:

வரப்பிலும் ஈட்டலாம் கவர்ச்சியான வருமானம்! விபரம் உள்ளே!

தரிசு நிலத்தில் நிலக்கடலைப் பயிர் செய்ய ரூ. 22,800 மானியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)