Horticulture

Saturday, 17 April 2021 10:15 AM , by: Elavarse Sivakumar

கோடை உழவுக்குத் தேவையான ரசாயன உரங்களை மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோடையில் உழவு செய்தல் மண்ணுக்குச் சிறந்த பலனைத் தரும். இந்நிலையில், கோடை உழவு குறித்து, திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குனர் பாண்டித்துரை தெரிவித்ததாவது:
மாவட்டத்தில் பெய்யும் கோடை மழையைப் பயன்படுத்தி, விவசாயிகள் உழவு மேற்கொள்ள வேண்டும்.

புழுக்கள் மற்றும் நோய்கள் (Worms and diseases)

இதன் மூலம் பயிரைத் தாக்கும் புழுப் பூச்சிகளின் கூட்டுப்புழுக்களையும், வேர் அழுகல், வாடலை உண்டாக்கும் பூஞ்சான வித்துகளையும் அழிக்கலாம்.

உரங்கள் கையிருப்பு (Fertilizer stock)

கோடை காலப் பருவ சாகுபடியில் ஏப்ரல் மாதத்திற்கு யூரியா, டி.ஏ.பி. பொட்டாஸ் காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் என 1310 டன்கள் தேவை உள்ளன. தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை தயார் நிலையில் நிலையங்களில் உரம் தேவையான அளவுக்கு வைக்கப்பட்டுள்ளன.

யூரியா 3800. டி.ஏ.பி 715 . பொட்டாஸ் 1900, காம்பளக்ஸ் 5100 மெட்டன்களும், சூப்பர் பாஸ்பேட் 600 என மொத்தம் 12115 டன்கள் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படுகிறது.

இவற்றை மானிய விலையில் பெற்று விவசாயிகள் பயனடையலாம். மானிய விலையில் உரங்களைப் பெற விவசாயிகள் தங்கள்  ஆதார் கார்டையை உர நிறுவனங்களிடம் சமர்க்க வேண்டியது அவசியம். 

மேலும் படிக்க...

நெல்மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்க, சேற்றில் புரண்டு விவசாயி நூதன போராட்டம்!

விலை குறைவால், வேதனையுடன் தக்காளியை ஏரியில் கொட்டிய விவசாயிகள்!

நள்ளிரவில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை அறிய புதிய யுக்தி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)