மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 July, 2021 11:22 AM IST
Credit : Teahub

சேலம் மாவட்டத்தில் கரும்புக்குச் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க கூடுதல் மானியம் வழங்கப்பபட உள்ளதாக வேளாண்துறை அறிவித்துள்ளது.

இனிப்பாக இல்லை (Not sweet)

கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் வாழ்க்கை அவ்வளவு இனிப்பாக இல்லை என்பதால், தங்களுடைய நிதிச்சுமையைக் குறைக்க ஏதுவாக கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கூடுதல் மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுத் தொடர்பாக சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு பயிருக்குச் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.

100% மானியம் (100% subsidy)

சொட்டு நீர் பாசனத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

ரூ.1 லட்சத்திற்கு மேல் (More than Rs.1 lakh)

  • கரும்பு பயிரிடும் சிறு, குறு விவசாயிகளுக்கு திறந்தவெளி கிணறு மூலம் மேற்பரப்பு சொட்டு நீர் பாசனக்கருவி அமைப்பதற்கு, வழக்கமான பயிர் மானியம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 133 வழங்கப்படுகிறது.

  • தற்போது ரூ.1 லட்சத்து, 51 ஆயிரத்து 368 வழங்கப்பட உள்ளது. இதர விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 115 வழங்கப்பட உள்ளது.

மானியம் (Subsidy

ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மேற்பரப்பு, சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியமாக ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 844 வழங்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required

  • சிட்டா

  • அடங்கல்

  • குடும்ப அட்டை நகல்

  • ஆதார் அட்டை நகல்

  • நிலவரைபடம்

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3

  • போட்டோக்கள்

முன்பதிவு அவசியம் (Booking is required)

சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் மேற்கூறி ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

சம்பங்கி பூ தொடரும் விலை வீழ்ச்சியால் கலக்கத்தில் விவசாயிகள்! கிலோ ரூ.130லிருந்து ரூ.30க்கு குறைந்த அவலம்!!

ஆசிரியர் தொழிலுடன் சேர்த்து, தினமும் 8 கிலோ சம்பங்கி பூ சாகுபடி செய்து அசத்தும் பெண் விவசாயி!

English Summary: Sugarcane drip irrigation subsidy over Rs. 1 lakh!
Published on: 18 July 2021, 11:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now