1. செய்திகள்

சம்பங்கி பூ தொடரும் விலை வீழ்ச்சியால் கலக்கத்தில் விவசாயிகள்! கிலோ ரூ.130லிருந்து ரூ.30க்கு குறைந்த அவலம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

பவானிசாகர் பகுதிகளில் விளையும் சம்பங்கிப்பூ தொடர்ந்து அதிகப்படியாக விலை சரிந்து வருவதால் பூ விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கிப் பூ தற்போது விலை சரிந்து ரூ.30க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர், தொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், எரங்காட்டூர், அக்கரைதத்தப்பள்ளி, கொத்தமங்கலம், கெஞ்சனூர், பகுத்தம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50- க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பங்கி பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.

தினமும் 2 டன் சாகுபடி

மேற்கூறப்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் சுமார் 2 டன் பூக்கள் விளைகிறது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

விலை வீழ்ச்சி

பவானிசாகர் பகுதியில் கடந்த மாதம் இறுதியில் சம்பங்கி பூ விலை கிலோ ரூ.140 வரை விற்பனையானது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பவானிசாகர் பகுதியில் சம்பங்கி பூ விலை குறைந்து வருகிறது. கடந்த 2-ந் தேதி சம்பங்கி பூ கிலோ ஒன்று ரூ.50 ஆக இருந்தது.

கிலோ ரூ.30க்கு விற்பனை

நேற்று முன்தினம் சம்பங்கி பூ கிலோவுக்கு மேலும் ரூ.10 குறைந்து ரூ.40-க்கு விற்பனை ஆனது. நேற்று சம்பங்கி பூ மேலும் ரூ.10 குறைந்து கிலோ ஒன்று ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி பூ விலை தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இந்த விலைக்கு விற்றால் நாங்கள் நஷ்டத்தில் சாக வேண்டும் எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

English Summary: Farmers Suffers over continued fall in prices of Samangi flower of Less than Rs 130 to Rs 30 per kg Published on: 05 April 2021, 02:38 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.