Horticulture

Monday, 12 October 2020 09:28 AM , by: Elavarse Sivakumar

Credit : The Hindu

ஊட்டியில் கேரட் உற்பத்தியை 60 சதவீதம் அதிகரிக்க ஏதுவாக அரசு சார்பில் 5 இடங்களில் கேரட் கழுவும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசால், 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், சிறு நிறுவனங்களுக்கான உணவு பதப்படுத்தும் திட்டம், 2021-25ம் ஆண்டு வரை அமல்படுத்தப்படுகிறது. அதில், நீலகிரி மாவட்டத்திற்கு, கேரட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை, மொத்த மலை காய்கறி உற்பத்தியில், 40 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த கேரட் உற்பத்தியை அடுத்தாண்டு முதல், 60 சதவீதமாக உற்பத்தியை உயர்த்த வேளாண்மை துறையினர் நடவடிக்கை எடுத்து, கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, கேரட்டை சுத்தப்படுத்தி சந்தைக்கு அனுப்ப, அரசு சார்பில் அணிக்கொரை, தாவணெ, சுள்ளி கூடு, ஒட்டி மர ஒசஹட்டி, அல்லஞ்சி ஆகிய பகுதிகளில் கேரட் கழுவும் நவீன இயந்திரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதன் மூலம் நாள் ஒன்றுக்கு, 10 முதல் 12 டன் அளவுக்கு கேரட்களை கழுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,'' அரசு சார்பில் மாவட்டத்தில், 5 இடத்தில், கேரட் கழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் உற்பத்தி செய்த கேரட் முழுவதையும் குறைந்த விலையில், இங்கு வந்து கழுவி பயனடைய வேண்டும்,'' என்றார்.

மேலும் படிக்க...

பாரம்பரிய விதைநெல் விற்பனை- இயற்கை விவசாயிகள் கவனத்திற்கு!

அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்திக்கு மானியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)