சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 11 October, 2021 2:07 PM IST
Tips to Protect Your Aloe Vera Plant from Drooping

கற்றாழை, அனைவரின் வீட்டிலும் வளர்க்கப்படும் பிரபலமான வீட்டு தாவரம் ஆகும், ஆக்ஸிஜனேற்றிகளின் நல்ல ஆதாரமாகும். இது நமது சருமத்தை புற ஊதா கதிர்வீச்சின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் நமது சருமத்தை சரிசெய்கிறது மற்றும் முகத்தில் காணப்படும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்க உதவுகிறது.

மற்ற பயிர்களைப் போலவே, கற்றாழையை வேளாண்மை செய்வதற்கு சில நிபந்தனைகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். நீங்கள் சந்திக்கும் சாவல்களை சரிசெய்வதற்கு நன்கு வடிகட்டிய மண் தேவைப்படுகிறது மற்றும் வடிகால் துளைகள் கொண்ட ஒரு தொட்டியில் நடப்பட வேண்டும், அதனால் வேர்கள் தண்ணீரிலேயே இருக்காது.

நீளமான கீறுகள் காய்ந்து மெல்லியதாகத் தோன்றுவதை பார்த்தால் நீங்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் தெளிவாகிக்கொள்ளுங்கள். 

காய்ந்துபோவதற்கான 3 காரணங்கள்:

உங்கள் கற்றாழை செடிகள் ஏன் தொய்வடைகின்றன, அது மீண்டும் நிகழாமல் தடுக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதை விரிவாக விவாதிப்போம்:

1.கற்றாழைக்கு அதிகமாக நீர்ப்பாசனம் செய்வது தவறு!

கற்றாழையின் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், செடியை மேலெழும்பும்போது அதாவது வளரும் போது, அதன் கிறுக்கள் தண்ணீரில் நனைந்து ஈரமாகவும் மென்மையாகவும் ஆகும். கிட்டத்தட்ட முழு கீறுகளும் தண்ணீரில் நனைந்தது போல் இருக்கும். பின்னர் அது அழுகும் நிலை ஏற்பட்டு முழு தாவரமும் நாசமடைகிறது. அதனால்தான் நன்கு வடிகட்டிய மணல் மண்ணை வைத்திருப்பது மிகவும் முக்கியம். குளிர்காலத்தில், ஈரப்பதம் அதிகம் இருப்பதால் விரைவாக வறண்டு போகாது, அதனால் வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது.

2.வடிகால் அமைப்பு

பானையில் சரியான வடிகால் இல்லாது இருந்தால் உங்கள் செடி நீரில் மூழ்கி அழுகக் கூடும். பானையின் அடிப்பகுதியில் கூழாங்கற்களை அடுக்காக வைப்பது உண்மையில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும். மண்ணின் வழியாக ஈரப்பதம் கீழே செல்லும்போது, கூழாங்கற்களின் மேல் தண்ணீர் தேங்கும்.

அதாவது கற்றாழையின் வேர்கள் நல்ல நிலையில் இருக்கும். மண் துகள்களுக்கு இடையில் காற்று செல்லும் அளவிற்குஇடைவெளி இருக்கும் அது நீரால் நிரப்பப்படும், வேர் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும், பற்றாக்குறை ஏற்பட்டு தாவரத்தின் வேர்கள் இறக்கும் நிலை ஏற்படாது.

3.உங்கள் கற்றாழை செடி போதுமான சூரிய ஒளியைப் பெறுவதில்லை

மற்ற தாவரங்களைப் போலவே, கற்றாழையும் செழித்து வாழ உயிர் ஒளி தேவைப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான செடிக்கு ஒரு நாளைக்கு ஆறு மணிநேர சூரிய ஒளி தேவைப்படுகிறது. கற்றாழையை நிழலில் வைத்தால் அதனுடைய கீறுகள் சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும், மேலும் அதற்காக அதனை சூரிய ஒளியில் அதிக நேரம் வைத்தால் அது வெயிலில் கருகும்.இரண்டு நிலையையும் கண்காணித்து வைக்க வேண்டும்.

நீர்ப்பாசன பிரச்சனைகளை எப்படி சரிசெய்து:

நீர் தேங்கி நிற்கும் உங்கள் செடியை தோண்டி எடுத்து ஓரிரு நாட்கள் உலர வைக்கலாம். உங்கள் செடிக்கு அடிவாரத்தில் இருந்து வளரும் சிறிய செடிகளை பார்த்து செய்ய வேண்டும். 

உங்கள் கற்றாழைக்கு பிரகாசமான ஆனால் மறைமுக ஒளியைக் கொடுத்து உலர்ந்த பக்கத்தில் வைக்கவும். இதற்கு சில வாரங்கள் ஆகலாம், ஆனால் நீங்கள் தாவரத்திலிருந்து புதிய, ஆரோக்கியமான இலைகள் வளரத் தொடங்குவதைப் பார்க்க முடியும்.

மேலும் படிக்க...

ஒரு கிலோ ரூ. 5000- த்திற்கு!!!மருத்துவத் தாவரம்! சிவப்பு கற்றாழை!!!

கற்றாழையை இந்த 4 வழிகளில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்!

English Summary: Tips to Protect Your Aloe Vera Plant from Drooping
Published on: 11 October 2021, 02:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now