மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 January, 2021 8:07 AM IST
Credit : Dinamalar

கோவையில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு தலா 2,500 திசு வாழைக் கன்றுகள் (Tissue Banana seedlings) இலவசமாக வழங்கப்படவுள்ளன.

திசுவாழை வளர்ப்பை ஊக்குவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

திசு வாழை வளர்ப்புத் திட்டம் (Tissue Banana Cultivation)

இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத் தோட்டக்கலைத் துறை சார்பில் திசுவாழை வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக தேசியத் தோட்டக்கலை இயக்கத்தின் (National Hoticulture Mission)கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக வாழைக் கன்றுகள் வழங்கப்படுகின்றன.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 3 லட்சத்து 75 ஆயிரம் வாழைக் கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

2,500 வாழைக்கன்றுகள் (2,500 banana seedlings)

இந்தத்திட்டத்தின்படி ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2,500 கன்றுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இதனை வளர்க்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், பயன்படுத்த வேண்டிய உரங்கள், இயற்கை மருந்துகள் உள்ளிட்டவை குறித்த வழிகாட்டுதல்களும்  அளிக்கப்பட உள்ளன. 

எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலைத் துறை (Horticulture Department Office) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

பெரம்பலூரில் அமோக விளைச்சல் -அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்!

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சு-தோல்வியில் முடிவடைந்தது!

கண்கவர் விவசாயக் கண்காட்சி- கள்ளக்குறிச்சியில் ஏற்பாடு!

English Summary: Tissue Cultivation Scheme - 2,500 banana seedlings per farmer free of cost!
Published on: 06 January 2021, 07:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now