Horticulture

Saturday, 06 November 2021 07:17 AM , by: Elavarse Sivakumar

Credit : Boldsky Tamil

தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

தரிசு நிலங்கள் (Barren lands)

சேலம் மாவட்டத்தில் 2021-22-ம் நிதி ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வாயிலாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், 370 ஹெக்டேர் பரப்பளவுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

எந்தப் பணிகளுக்கு மானியம்?

குறிப்பாக, நிலத்தில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், நிலத்தை சமன்செய்தல், உழவு பணிகள், விதை, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கலவை விநியோகங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.

சிறுதானியங்கள் (Cereals)

தரிசு நிலங்களில் சிறுதானியங்கள் 200 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய ரூ.26.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுதானியங்கள் பயிர் சாகுபடிக்கு மானியமாக ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 400 வழங்கப்பட உள்ளது.

பயறு வகைகள் (Legumes)

பயறு வகைகள் 120 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு ரூ.16.08 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளன. பயறு வகைகள் பயிர் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 400 மானியமாக வழங்கப்படவுள்ளது.
நிலக்கடலை 50 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய ரூ.11.40 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நிலக்கடலை பயிர் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.22 ஆயிரத்து 800 மானியமாக வழங்கப்படவுள்ளது.

தொடர்புக்கு (Contact)

எனவே, தரிசு நிலங்களில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

தகவல்
கார்மேகம்
சேலம் மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க...

தமிழக விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1,234 கோடி பட்டுவாடா!

நெற்பயிர் வயல் வரப்பில் பயறு வகை: மகசூலை அதிகரித்து, மன்வளத்தை கூட்டும்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)