Horticulture

Monday, 07 December 2020 08:42 AM , by: Elavarse Sivakumar

Credit: Swarajya

நெல் ஜெயராமனின் நினைவாக, டிசம்பர் 6ம் தேதியை பாரம்பரிய நெல் தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் நெல் ஜெயராமன். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜெயராமன், பாரம்பரிய நெல் இரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தியவர்.

தனது சீரிய முயற்சியால், அரிய 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் 2-வது ஆண்டு நினைவு தினம் நேற்று மாநிலம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விவசாயிகள் நெல் ஜெயராமனின் நினைவாக, டிசம்பர் 6ம் தேதியை பாரம்பரிய நெல் தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே நெல் ஜெயராமனின் நினைவு நாளையொட்டி, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் குளூர் அருகே உள்ள சிவலிங்கபுரத்தில் விவசாயி கே.எஸ்.ராஜேஸ்வரன் என்பவரின் 12 ஏக்கர் நிலத்தில் சுமார் 3,500 மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் நல்லசாமி கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தார். தன்னார்வ தொண்டு அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

குறிப்பாக, சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயியின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக தேக்கு, கருமருது, செம்மரம், சந்தனம், ரோஸ்வுட் போன்ற விலைமதிப்புமிக்க மரங்கள் நடப்பட்டன.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

மேலும் படிக்க...

50% மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம் - உதகை பெண்களுக்கு அழைப்பு!

இயற்கை தேனி வளர்ப்பாளர்கள் பக்கம் திரும்பிய வாடிக்கையாளர்கள் - தேனில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்!

விண்வெளியில் முள்ளங்கி சாகுபடி - அசத்திய Astronaut!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)