மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 May, 2021 10:31 AM IST
Credit : 10 Best

கொரோனா ஊரடங்குக் காரணமாகக் கடலூரில் பலாப்பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால், அறுவடை செய்யாமல் மரத்திலேயே பலாப்பழங்கள் வெடித்து வீணாகின்றன.

பலாச் சாகுபடி (Jackfruit cultivation)

கடலூர் மாவட்டத்தில் செம்மண் பூமியான பண்ருட்டி, காடாம்புலியூர், நடுவீரப்பட்டு, சிலம்பி நாதன்பேட்டை, விலங்கல்பட்டு, பெத்தாங்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பில் பலா பயிரிடப்பட்டுள்ளது.

பலா சீசன்(Jackfruit Season)

இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் துவங்கி, மே மாதம் வரை பலாப்பழ சீசன் ஆகும்.

வெளிமாநில விற்பனை (Other state Sales)

இந்தக் காலங்களில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும் பலாப்பழங்கள் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

மரங்கள் குத்தகைக்கு (Leasing of trees)

இதற்காக அங்கிருந்து மொத்த வியாபாரிகள் ஆண்டுதோறும் கடலூருக்கு வந்து பலாப்பழங்களைக் கொள்முதல் செய்வர். இதனைக் கருத்தில்கொண்டு, உள்ளூர் வியாபாரிகள், பலா மரங்களை விவசாயிகளிடம் குத்தகைக்கு எடுத்து, அறுவடை செய்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வர்.

வெடித்து வீணாகும் நிலை (Explosive waste level)

இதன்படி கடந்த பிப்ரவரி மாதம், பலாப்பழம் அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில், கொரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வெளியூர் வியாபாரிகள் வரவில்லை. இதனால் , பலாப்பழங்கள் மரத்திலேயே வீணாகி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாங்க ஆள் இல்லை (No Purchase)

இது குறித்து சேடப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஊரடங்குக் காரணமாகப் பலாப்பழங்களை வாங்க வியாபாரிகள் வரவில்லை.

அறுவடை (Harvesting)

அதையும் மீறி சில இடங்களில் கூடுதல் கூலி கொடுத்து ஆட்களை வரவழைத்து, பலாப்பழங்களை அறுவடை செய்தோம்.

குறைந்த விலை (Low Price)

அந்தப் பழங்களை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், சுற்றுப்பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம். ஆனாலும், முழுமையாக விற்பனையாவதில்லை.

பெரிய அளவில் நஷ்டம் (Large-scale loss)

ஆயிரக்கணக்கில் பலாப்பழங்கள் மரத்திலேயே வெடித்து, அழுகி வருகின்றன. இதனால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கைத் தேவை (Action required)

எனவே பலாப்பழங்களை அறுவடை செய்யவும், இங்கிருந்துத் தடையின்றி வெளி மாநிலங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்ல, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க...

கடலூரில் விதை பரிசோதனை திட்ட பணிகள் ஆய்வு! அதிக மகசூலுக்கு விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்!

சீசன் இல்லாத காலத்தில் மல்லிகைப்பூ பூக்க ஆலோசனை வழங்குகிறது வேளாண் துறை! குறைந்த செலவில் அதிக இலாபம்!

மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!

English Summary: Waste jackfruit exploding on the tree due to curfew!
Published on: 14 May 2021, 10:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now