News

Wednesday, 23 November 2022 07:27 PM , by: T. Vigneshwaran

Ration Shop

கனமழை காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததையடுத்து, நாளை முதல் நியாய விலைகடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்து தாழ்வு நிலை காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக அப்போது சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 44செ.மீ அளவிற்கு மழை பெய்தது.

இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் ஆய்வு செய்த பிறகு, மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதலமைச்சர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 வழங்க உத்தரவிட்டிருந்தார்

இதையடுத்து, நாளை முதல் நியாய விலைகடைகளில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

ரூ.35,000 பென்ஷன்: திட்டம் பற்றி தெரியுமா?

கல்வி உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)