News

Wednesday, 30 March 2022 12:13 PM , by: Elavarse Sivakumar

மத்திய அரசின் மகத்தானத் திட்டமான 100நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் தினக்கூலியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலைஉயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 10 மாநிலங்களுக்கு மட்டுமே 5சதவீதத்திற்கும் அதிகமான உயர்வு கிடைத்துள்ளது. இவை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

2022-23 நிதியாண்டிற்கான கிராமப்புற வேலை உறுதித் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் புதிய ஊதிய விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவும், 10 மாநிலங்கள் 5 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வும் பெறுகின்றன. மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளவில்லை. இந்த புதிய ஊதியம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதிகபட்சமாக கோவாவுக்கு 7.14 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 2021-22இல் தினக்கூலியாக ரூ294 இருந்த நிலையில், 2022-23க்கு 315ஆக உயர்ந்துள்ளது. குறைவான ஊதிய உயர்வாக 1.77% மேகாலயாவுக்கு கிடைத்துள்ளது. அங்கு தினக்கூலி 226இல் இருந்து 230ஆக உயர்ந்துள்ளது.
அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஊதியம் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2022-23 ஆம் ஆண்டிற்கான NREGS ஊதியங்கள் ஒரு நாளைக்கு ரூ 4 முதல் ரூ 21 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

MGNREGA ஊதிய விகிதங்கள் CPI-AL (நுகர்வோர் விலைக் குறியீடு-விவசாயத் தொழிலாளர்) மாற்றங்களின்படி நிர்ணயிக்கப்படுகின்றன, இது கிராமப்புறங்களில் பணவீக்கத்தின் அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.

மேலும் படிக்க...

இல்லத்தரசிகளுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசம்- மாநில அரசு முடிவு!

அழகை என்றும் தக்கவைக்க- இவற்றுக்கு 'உ ஊ' சொல்லுங்க!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)