News

Monday, 17 April 2023 11:50 AM , by: Muthukrishnan Murugan

11 peoples died due to heatwave in Maharashtra Bhushan award function

'மகாராஷ்டிரா பூஷன்' விருது வழங்கும் விழாவில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 20 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று ராய்காட் மாவட்டத்தில் உள்ள கர்கர் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட 'மகாராஷ்டிரா பூஷன்' விருது வழங்கும் விழா நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விழாவில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கார்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐந்து மருத்துவமனைகளில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 44 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 20 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர், மற்றவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று ராய்காட் மாவட்ட தகவல் அதிகாரி தெரிவித்தார்.

11 இறப்புகள் தொடர்பாக கார்கர் காவல்துறை விபத்து இறப்பு அறிக்கைகளை (ADR) பதிவு செய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் எட்டு பெண்களும் அடங்குவர். அதிகாரிகளின் கூற்றுப்படி, பத்து உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

நேற்றைய தினம் அந்த இடத்திற்கு அருகில் உள்ள வானிலை நிலையம் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார், நவி மும்பையில் உள்ள கமோத்தேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு நேரில் சென்று சூரிய ஒளியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்களிடம் நலம் விசாரித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவம் "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்றும், நோயாளிகள் விரைவில் குணமடைவதை உறுதி செய்வதே முன்னுரிமை என்றும் கூறினார்.

யார் நிகழ்வை மதியம் ஏற்பாடு செய்தார்கள்?

இது மகாராஷ்டிரா அரசினால் நிகழ்ந்த விபத்து என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் கூறினார். ஏப்ரல்-மே மாதங்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நாட்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என்றார்.

"எனவே, விருது வழங்கும் விழாவிற்கு மதிய நேரத்தை நிர்ணயித்தது யார் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" என்று என்சிபி தலைவர் கூறினார். விழாவை மாலையில் நடத்தியிருக்கலாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹெலிகாப்டர் எடுத்துச் சென்றிருக்கலாம் என்றும் பவார் கூறினார்.

விருது பெற்றது யார்:

இந்த நிகழ்வில் ஆன்மீகத் தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மகாராஷ்டிர பூஷன் விருதை அமித்ஷா  வழங்கினார். தர்மாதிகாரி தனது மரம் வளர்ப்பு இயக்கங்கள், இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்கள் மற்றும் பழங்குடியின பகுதிகளில் போதை ஒழிப்பு பணி ஆகியவற்றின் காரணமாக மாநிலத்தில் பலரால் பின் தொடரப்படும் நபராக திகழ்கிறார்.

எம்ஜிஎம் மருத்துவமனையில் அதிகபட்சமாக 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நவி மும்பையில் உள்ள மற்ற மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளும் குணமடைந்து வருவதாகவும், அவர்கள் நிலையாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

விபத்து குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே கூறுகையில், எதிர்பாராத இந்த மரணங்கள் "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று குறிப்பிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

விவசாயிகளை அச்சுறுத்தும் பாம்பு பிரச்சினைக்கு தீர்வு- பள்ளி மாணவர்கள் சாதனை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)