மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 February, 2021 6:52 PM IST
Credit : Polimer News

சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் ஆறு மாசடைந்ததை அடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், விவசாயிகளுக்கு ஆதரவாக அருமையான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இன்று வழங்கியுள்ளது. சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு (Relief fund) வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இழப்பீடு:

திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கமாறு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. கரூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தின்அதிரடி தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீட்டுத் தொகையை வருகின்ற மே 31 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாயப்பட்டறை கழிவுகளால், நொய்யல் ஆறு மாசடைந்து, விவசாயத்திற்கு பாசன வசதி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகள், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, அப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்!

வீட்டுச் செடிகளுக்கு அற்புத உரமாகும் கெட்டுப்போன பால்!

English Summary: 127 crore compensation for farmers affected by dyehouse waste! Chennai High Court orders!
Published on: 24 February 2021, 06:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now