News

Thursday, 11 April 2019 02:29 PM

தமிழக அரசின் சமசர் கல்வி திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியிடப்படும், என அரசு கல்வி துறை சார்பில் தகவல் அறிவிக்க  பட்டுள்ளது.

தமிழகத்தின் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு  10, 11, 12-ம் வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வு அறிவிக்க பட்டிருந்தது. தேர்வானது கடந்த மார்ச் 1- ஆம் தொடங்கி 29- ஆம் தேதியுடன் முடிவடைந்தன. தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடை பெற்று வருகிறது.

தேர்வு அதிகாரி கூறியது

தமிழகம் முழுவதிலிருந்து சுமார் 27  லட்சம் மாணவ,மாணவியர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களது விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து, மதிப்பெண் பதிவேற்றம் செய்யும்  பணி நடந்து வருகிறது.   தேர்வு முடிவுகள் ஏப்.19-இல் வெளியிடப்படும்தேர்தல் காரணமாக தேர்வு முடிவினை தள்ளி வைக்க அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் திருத்தும் பணி நிறைவடைத்ததால் முடிவுகளை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறினேன் என்றார். தேர்வு முடிவுகளை dge.tn.gov.in & tnresults.nic.in என்ற இனையதளத்திலும் பார்க்கலாம். மேலும்  தேர்வு  முடிவுகளை குறுஞ்செய்திகளாக  அனுப்பப்படும் என்று கூறினார். ௧௦ வகுப்புகளின் தேர்வு  முடிவுகள் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட முடிவு செய்ப்பட்டுள்ளது என்றார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)