News

Wednesday, 24 August 2022 12:30 PM , by: Deiva Bindhiya

130 Indians in important positions of the US President!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அமெரிக்க நிறுவனங்களில் பல தமிழர்கள் உயர்ந்த பதவிகளை வகித்து வருகின்றனர்.

இப்போது அரசு உயர் பதவிகளும் அவர்களை தேடி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே 2020-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை அதுவும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ் இருந்து வருகிறார்.

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பு அதிகமாகும்.

இந் நிலையில் தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோபைடன் தனது நிர்வாகத்தில் 130-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்களை நியமித்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அந்நாட்டின் பல்வேறு துறைகளில் அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அமெரிக்க தூதரகத்தில் பலர் இடம் பெற்று உள்ளனர். வெளியுறவு துறை துணை தொடர்பாளராக வேதாந்த் பட்டேல் உள்ளார். கரீமா வர்மா டிஜிட்டல் இயக்குநராக பதவி வகித்து வருகிறார். இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் ஆவார் என்பது குறிப்பிடதக்கது.

இதற்கு முன்பு அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தனது நிர்வாத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 80 பேரும் அதற்கு முன்பு இருந்த ஒபாமா நிர்வாகத்தில் 60 பேரும் உயர் பதவிகளில் இருந்தனர். இந்நிலையில், தற்போது அதனை முறியடிக்கும் வகையில் ஜோபைடன் 130 பேரை நியமித்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் படிக்க:

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு பரிசீலிப்பு

இந்தோ-திபேத்தன் போலீஸ் படையில் B.E படித்தவர்களுக்கு வேலை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)