News

Sunday, 03 April 2022 07:24 PM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என பரவிய தகவல் பொய் என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணைகள் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த ஆண்டுக்கான இறுதி தேர்வு நடைபெறாது என்று செய்தி பரவியது.

மேலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு வரை மட்டுமே ஆண்டுத்தேர்வு நடைபெறும் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.

அதனால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 11-ம் வகுப்புக்கு மே 9-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்புக்கு மே 5-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழுஆண்டுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

கோடை வெயிலைக் கொளுத்திவிட- தினமும் 4 புதினா இலைகள்!

லட்சம் ரூபாயை எட்டிய பஞ்சு விலை- ஜவுளித்துறை முடங்கும் அபாயம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)