News

Sunday, 05 June 2022 07:05 PM , by: T. Vigneshwaran

Shepherd

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஈன்றபாளையம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சிரளபாக்கம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் விக்கி என்ற கோகுல் (14 வயது) வந்துள்ளான். 9-ம் வகுப்பு படிக்கும் கோகுலும் அதேப்பகுதியை மற்றொரு 14 வயது சிறுவனான ரித்தீஷ் இருவரும் ஆரணி ஆற்றில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆடுகளை கரையில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மேலும் சில நண்பர்களுடன் சிறுவர்கள் இருவரும் ஆற்று நீரில் குளித்து மகிழ்ந்துள்ளனர்.

ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவர்கள் இருவரும் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஊத்துக்கோட்டை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். போலீஸார் சிறுவர்களின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆரணி ஆற்றில் சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோடை விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்கு வந்து உறவுக்கார சிறுவனுடன் சேர்ந்து ஆரணி ஆற்றில் நீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

முக்கிய அறிவிப்பு- விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)