சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 7 May, 2019 12:09 PM IST

இன்று அட்சய திருதியை நன்னாள். இந்த நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்தும் புதிய நகை வாங்கியும் நாளை கொண்டாடுவர். பழங்கள், இனிப்பு, பலகாரம், பால், உப்பு, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வைத்து பூஜை செய்து வழிபடுவர். மேலும் காலம் காலமாக அட்சய திருதியை நாளில் நகை வாங்குவதை ஒரு நம்பிக்கையான கலாச்சாரமாக மக்கள் கடை பிடித்து வருகின்றனர். இந்நாளில் நகை வாங்கினால் வீட்டில் செல்வம் சேரும் என்பது தமிழர்களின் பாரம்பரிய நம்பிக்கை மற்றும் கலாச்சாரமாகும்.

அட்சய திருதியை நாளையொட்டி அணைத்து நகை கடைகளிலும் சிறப்பு தள்ளுபடி, சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே இன்னலுக்கான சிறப்பு தள்ளுபடி, சலுகைகள்  தொடர்பான  விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.பெண்கள், ஆண்கள், குழந்தைகள், அனைவரையும் கவரும் வண்ணம் புதிய புதிய மாடல்களில், டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுவாகவே நகை கடைகள் பார்க்க அழகாக இருக்கும், மற்றும் சிறப்பு நாளான இன்று மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் மின் விளக்குகள், பூக்கள் கொண்டு கடைகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் காலை 6 மணிக்கே கடைகளை திறக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் வழக்கமான நாட்களை விட அட்சய திருதியை நன் நாளான இன்று 4 மடங்கு வியாபாரம் அதிகரிக்க நகை வியாபாரிகள் இலக்கு நியமித்துள்ளார். பெண்களை கவரும் வண்ணம் அதிகமான மாடல்கள், டிசைன்களில் லைட் வெயிட், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆறாம், நெக்லஸ், டாலர், பிரேஸ்லட், செயின், மோதிரம், வளையல், மேலும் பல நகைகள் புது புது டிசைன்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன..  

அட்சய திருதியை நன்னாளில் மக்கள் தங்கள் வீடுகளில் பால் மற்றும் உப்பு வாங்குவது மிகவும் சிறப்பானது.அனைவரும் இந்த நன்னாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக்கள்........

English Summary: 2019 Akshaya tritiya: pooja festive: how people celebrate
Published on: 07 May 2019, 12:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now