மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 July, 2021 7:16 PM IST
Credit : Dinamalar

உலக அளவில் கோவிட் பெருந்தொற்றின் 2வது அலை கட்டுக்குள் வரும் நிலையில், தற்போது திடீரென மீண்டும் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அச்சம் தெரிவித்துள்ளது.

கொரோனா உயிரிழப்பு

உலக அளவில் இதுவரை 19.5 கோடி பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 41.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 69 ஆயிரம் பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இதனால் கோவிட் உயிரிழப்பு 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான உயிரிழப்பு அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டு உள்ளன. குறிப்பாக, கோவிட் தடுப்பூசியின் (Covid Vaccine) இரு டோஸ்களையும் செலுத்திக் கொள்ளாதவர்களே தீவிர தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதே உயிரிழப்பை தடுக்கும். ஆனால் பல ஏழை நாடுகளில் முன்களப் பணியாளர்களுக்கே தடுப்பூசி கிடைக்காத நிலை நீடிக்கிறது. இந்த நிலையை மாற்ற வளர்ந்த நாடுகள் உதவ முன்வர வேண்டும். அதேபோல், கோவிட் புதிய பாதிப்புகளும் கடந்த வாரத்தில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால், இன்னும் இரு வாரங்களில் ஒட்டுமொத்த பாதிப்பு 20 கோடியை மிஞ்சிவிடும். அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாகி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

27 வகை கொரோனாக்களை சமாளிக்கும் திறன் பெற்ற தடுப்பு மருந்து!

நாடு முழுதும் ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி

English Summary: 21% increase in corona mortality: World Health Organization announces vaccine as the only solution!
Published on: 29 July 2021, 07:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now