சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 14 June, 2021 8:32 AM IST

சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வௌவால்களில் இருந்து 24 புதிய வகை கொரோனா வைரஸை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகாள உலகமே பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளும்கூட கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வௌவால்களில் இருந்தே மனிதர்களுக்கு கொரோனா பரவியதாகச் சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், உலகின் பல நாடுகளும் இதை நம்ப மறுக்கின்றன. வூஹான் வைராலஜி மையத்தில் இருந்தே கொரோனா பரவியிருக்கும் என உலக நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.

இந்த கொரோனா வைரஸ் பல்வேறு விதமாக உருமாறி 2வது, 3வது அலையாக சில நாடுகளில் வீரியமாகவும் பரவி வருகிறது. இப்படி உலகையே புரட்டிப்போட்ட கொரோனாவின் தோற்றம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கொரோனா தோற்றம் குறித்து முறையான மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

புதிய வகை கொரோனா வைரஸ்

இந்தச் சூழ்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை கொரோனா வைரஸ்களை காடுகளில் இருந்து சேகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர். வௌவால்கள் மத்தியில் எத்தனை கொரோனா வகைகள் உள்ளன என்பது குறித்தும் அதில் எத்தனை வகைகள் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது என்பது குறித்தும் கண்டறிய இது உதவும் எனச் சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திசைதிருப்பும் முயற்சி

கொரோனா வைரஸ் வூஹான் வைராலஜி மையத்தில் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்ற கருத்து ஒவ்வொரு நாளும் வலுவாகி வரும் நிலையில் சீனா ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் வௌவால்களில் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு அதிகம் என அவர்கள் கூறியுள்ளனர். இது கொரோனா தோற்றம் குறித்த விசாரணையைத் திசைதிருப்ப நடத்தப்படும் முயற்சியா என்றும் சில ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

 

மேலும் படிக்க...

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! - 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி!!

மீனவரை விழுங்கித் துப்பிய திமிங்கலம்- அமெரிக்காவில் விநோதம்!

English Summary: 24 new types of corona virus from bats says Chinese researchers report !!
Published on: 14 June 2021, 08:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now