மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 October, 2020 12:44 PM IST
Credit : Dinakaran

விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, 27,500 மெட்ரிக் டன் உரம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு (Thoothukudi port) வந்தடைந்தது.

27,500 மெட்ரிக் டன் உரம்:

ஃபெர்டிலைசர்ஸ் அன்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் (ஃபேக்ட்) நிறுவனம் இறக்குமதி (Import) செய்த, மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் என்னும் உரத்தை தாங்கிய மூன்றாவது கப்பல், தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்தது. விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக 27,500 மெட்ரிக் டன்கள் மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் உரம் (Muriate of potash fertilizer) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சரக்கை இறக்கி மூட்டைகளில் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் மூலம், இந்த வருடத்தில் 82,000 மெட்ரிக் டன்கள் மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று இறக்குமதி ஆர்டர்களை ஃபேக்ட் நிறுவனம் செய்திருந்தது.

விவசாயிகள் விரும்பும் உரங்கள்:

மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ஃபேக்ட்-இன் முக்கிய தயாரிப்பான ஃபேக்டம்பாஸ் (Factambass) மற்றும் மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் ஆகியவை இணைந்த உரக்கலவையை தென்னிந்திய விவசாயிகள் மிகவும் விரும்புகிறார்கள். இந்த ஆண்டில் இன்னும் இரண்டு 'பார்சல்களை' கொண்டு வர இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, காரிப் பருவத்தில், விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இரண்டு கப்பல்களில் மியூரியேட் ஆஃப் பொட்டாஷையும், ஒரு தொகுப்பு என்.பி.கே. (NPK)-வையும் ஃபேக்ட் (FACT) இறக்குமதி செய்தது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம்! தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சூரியகாந்தி விதைகள்!

English Summary: 27,500 metric tons of fertilizer imported! Thoothukudi port arrived!
Published on: 29 October 2020, 12:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now