மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 February, 2022 6:01 PM IST
2.70% interest on prepaid electricity bills

தமிழக மக்கள் மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. முன்கூட்டியே செலுத்தப்படும் மின் கட்டணத்திற்கு வழங்கப்படும் வட்டியை, 2022 - 23ம் நிதியாண்டிற்கு, 2.70 சதவீதமாக நிர்ணயித்து, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மின் கட்டணம் (Electricity Bill)

தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கெடுக்கிறது. கணக்கெடுத்த 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையேல், அபராதத்துடன் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும்.

வெளியூர் செல்வது உள்ளிட்ட காரணங்களால், குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே மின் கட்டணமாக செலுத்தும் வசதி உள்ளது. அதற்கு மின் வாரியம் ஆண்டு வட்டி (Interest) வழங்குகிறது. இதை, ஒழுங்குமுறை ஆணையம், ரிசர்வ் வங்கி வைப்பு நிதிகளுக்கு நிர்ணயிக்கும் வட்டியை பொறுத்து ஆண்டுதோறும் நிர்ணயம் செய்கிறது.

வட்டி நிர்ணயம் (Interest)

நடப்பு, 2021 - 22ம் நிதியாண்டிற்கு முன்கூட்டியே செலுத்தும் மின் கட்டணத்திற்கு, 2.70 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டது. அதே வட்டியை வரும், 2022 - 23ம் நிதியாண்டிற்கும் நிர்ணயித்து தற்போது, ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது, 2020 - 21ல் 3.25 சதவீதமாக இருந்தது.

மேலும் படிக்க

சமையல் எண்ணெய் தயாரிப்பில் நுண்ணுயிரிகள்!

காலாவதியான குளிர்பானத்தை வைத்திருந்தாலோ விற்பனை செய்தாலோ அபராதம்!

English Summary: 2.70% interest on prepaid electricity bills!
Published on: 25 February 2022, 06:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now