News

Tuesday, 29 March 2022 12:17 PM , by: Elavarse Sivakumar

இந்த மாதம் இல்லத்தரசிகளை அதிர்ச்சியடையச் செய்த விவகாரம் என்றால், அது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வுதான்.

ஒரு காலத்தில் 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட சமையல் சிலிண்டர் விலையை 1000 ரூபாயாக உயர்த்தியப் பெருமை மோடி தலைமையிலான பிஜேபி அரசையேச் சேரும். இந்நிலையில் தங்களது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 3 இலவச சிலிண்டர் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோவா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.


கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் தற்போது இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் எட்டு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதையடுத்து புதிய அமைச்சரவையின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்த பின்னர் தமது டுவிட்டரில்பிரமோத் சாவந்த் பதிவிட்டுள்ளார். அதில், புதிய நிதியாண்டு முதல், 3 இலவச சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

கோவா சட்டசபைத் தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் கோவா முதலமைச்சர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதுக் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

பெண்கள் இளம்வயதில் பூப்படைவதற்கு பிராய்லர் கோழி காரணமல்ல!

கெட்டக் கொழுப்பைக் கரைக்க வேண்டுமா? இது ஒன்றே போதும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)