மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 January, 2022 6:20 AM IST
To control 3rd wave

தடுப்பூசிக்கான மத்திய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா, ஒமைக்ரானால் மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்க கோவிட் நடத்தை விதிகளை பின்பற்றுவது, தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிப்பது, ஊரடங்கு ஆகிய 3 காரணிகள் உதவும் என்றார்.

தொற்று அதிகரிப்பு (Infection increased)

ஒமைக்ரான் வகை வைரஸ் பரவலால் கடந்த இரு வாரங்களாக இந்தியாவில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம் இதன் அறிகுறிகள் காய்ச்சல், சளி தொந்தரவு என்ற அளவிலேயே உள்ளது. டெல்டா வகையை போன்று மூச்சுத்திணறல், ஆக்சிஜன் அளவு குறைவது போன்றவை இதுவரை இல்லை. இன்று, இந்தியாவில் 1.6 லட்சம் பேரிடம் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 208 நாட்களில் இது அதிகபட்ச அளவாகும்.

3 முக்கிய காரணிகள் (3 Important key factors)

இந்நிலையில் தடுப்பூசித் திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது: ஐ.ஐ.டி., மாதிரிகள், வரும் நாட்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்பதைக் காட்டுகிறது. அது தற்போதே நடக்கிறது. தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் அலை, இரண்டு வாரங்களில் வேகமாக அதிகரித்தது. பின்னர் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

இந்தியாவில் தற்போது உச்சநிலை நிகழ்கிறது. இருப்பினும், இந்தியாவில் தடுப்பூசி விகிதம் பல மடங்காக உள்ளது. கோவிட் நடத்தை விதிகள், தடுப்பூசி ஆகியவை நோய் பரவலை கட்டுப்படுத்தும். ஊரடங்கும் அதற்கு உதவும், என்றார்.

மேலும் படிக்க

மத்திய அரசு வெளியிட்டுள்ள பூஸ்டர் டோஸ் பற்றிய முக்கிய தகவல்!

கொரோனா வைரஸைத் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம்!

English Summary: 3 key factors to prevent the 3rd wave: Central Advisory Committee!
Published on: 12 January 2022, 06:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now