மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 January, 2022 8:53 AM IST

மேற்குவங்க மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் ரயில் பயணிகள் மரண அச்சத்தில் இருந்தது நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது.

ரயில் பயணம் (Rail travel)

எப்போதாவது ரயில் விபத்துகள் நிகழ்வது வாடிக்கை என்றபோதிலும், அதன் நினைவுகள், ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் நமக்குள் அச்சத்தை ஏற்படுத்தாமல் இல்லை. இருப்பினும், தொழில், பணி மற்றும் சொந்தக் காரணங்களுக்காக ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

பயங்கர விபத்து (Terrible accident)

ராஜஸ்தானில் இருந்து அசாம் நோக்கிச் சென்ற கவுஹாத்தி - பிகானர் விரைவு ரயில் மேற்கு வங்க மாநிலத்தின் தோமாஹானி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலைவில், பயங்கர சத்தத்துடன் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளாயின.

இந்த விபத்தில் 3 பேர் உடல்நசுங்கி பலியானார்கள். 20 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இந்த விபத்தில்12-க்கும் மேற்பட்டப் பெட்டிகள் சேதமடைந்தன. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயர்மட்ட விசாரணை

சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தினர். இதையடுத்து விபத்திற்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க...

சமையல் எண்ணெய் விலை: முதல் முறையாக வீழ்ச்சி

சமையல் எண்ணெய் விலை குறைந்தது, மகிழ்ச்சியில் தமிழகம்!

English Summary: 3 killed in train derailment
Published on: 13 January 2022, 10:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now