News

Friday, 06 May 2022 07:01 PM , by: T. Vigneshwaran

Summer vacation

தமிழகத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 14 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 8.37 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தற்போது பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளில், பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்ப அலை மற்றும் அக்னி வெயில் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து பேட்டி அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், தேர்வு நாளில் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும், முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 14 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும், வரும் 14 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை.

ஒரு மாதம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 13 ஆம் தேதி, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கும். தமிழகத்தில் ஜூன் மாதம் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும். ஜூன் மாதம் 23 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 7 ஆம் தேதி வெளியாகும். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெளியாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

Noorjahan Mango:ரூ.2000க்கு ஒரே ஒரு மாம்பழம், ஏன்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)