News

Monday, 01 August 2022 08:00 PM , by: T. Vigneshwaran

468 Liquor Shops Closure

டெல்லியில் 864-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் டெல்லி மாநில தொழில்துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், டெல்லி மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் உள்பட 4 அமைப்புகள் மூலம் மதுபான விற்பனை கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோல தனியார் அமைப்புகளும் கடைகள் நடத்தி வருகிறார்கள். இதில் 475 மதுபான கடைகளின் உரிமம் நேற்றுடன் காலாவதி ஆனது. இதற்கிடையே கலால் துறையில் புதிய நடைமுறைகளையும், கொள்கைகளையும் அமல் படுத்த டெல்லி அரசு முயற்சி மேற்கொண்டது.

இதன்காரணமாக டெல்லியில் செயல்பட்டு வந்த 475 மதுபான கடைகளில் சுமார் 468 கடைகளை இன்று முதல் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மதுக்கடைகளின் உரிமம் காலாவதி ஆவதை தொடர்ந்து இக்கடைகளில் ஏற்கனவே மதுபான கொள்முதல் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுபானங்களுக்கு கடந்த சில நாட்களாக கடும் தட்டுப்பாடு நிலவியது.

இந்நிலையில் இன்று முதல் இக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தலைநகர் டெல்லியில் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே டெல்லி கலால் துறை மந்திரியும், துணை முதல்வருமான மணிஸ் சிசோடியா, டெல்லியில் சட்டவிரோத மதுபானம் விற்பனையை கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க:

சென்னையின் இரண்டாவது விமான நிலையம், எங்கே தெரியுமா?

ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு! மக்கள் மகிழ்ச்சி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)