மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 January, 2022 6:48 AM IST
5 days holiday for government employees

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வகையிலும், தை பூசத்தை முன்னிட்டும் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை (Continuous Holidays) அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருகிற 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

அரசு விடுமுறை (Government Holiday)

பொங்கலில் முக்கிய பங்கு வகிக்கும் கரும்பு, வாழைத்தார், மஞ்சள் கொத்து, காய்கறிகள் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்று மேலும் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் திருநாளை சொந்த ஊருக்கு சென்று கொண்டாடும் வகையிலும், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருப்பதாலும் திங்கட்கிழமையை அரசு விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் பொதுத் துறை செயலாளர் ஜகந்நாதன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 7ம்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், வருகிற 14ம்தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும், வரும் 16ம்தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளதாலும், 18ம்தேதி தைப்பூச திருநாள் அன்று அரசு விடுமுறை என்பதாலும், இடைபட்ட நாளான 17ம்தேதி திங்கட்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

உள்ளூர் விடுமுறை (Local Holiday) 

இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைபட்ட நாளான 17ம்தேதி (திங்கட்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

அதை ஈடு செய்யும் வகையில் 29ம்தேதி (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது. அதே நேரத்தில் 14ம் தேதி பொங்கல் திருநாள், மறுநாள் 15ம் தேதி (சனிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. 17ம் தேதி (திங்கட்கிழமை) தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. 18ம் தேதி தைப்பூசம் என்று தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வந்துள்ளது.

மேலும் படிக்க

வீரரோ, காளையோ ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி!

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து துறை அறிவிப்பு!

English Summary: 5 days consecutive holiday notice for government employees!
Published on: 12 January 2022, 06:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now