மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 December, 2020 2:09 PM IST
Credit : Maalai Malar

புரெவி புயல் (Burevi Cyclone) காரணமாக பெய்த கனத்த மழையால் தமிழகம் முழுவதும் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் (Paddy Crops) நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக வேளாண் அமைச்சர் அன்பழகன் (Anbalhagan) தெரிவித்துள்ளார்.

பயிர் சேதம் கணக்கெடுப்பு:

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா அருகே வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது. ஆனால் அது நகராமல் அதே இடத்தில் நிலைகொண்டதால் வட மாவட்டங்களில் கனமழை (Heavy Rain) பெய்தது. புயல், அதன்பின் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காற்றழுத்தத் தாழ்வு பகுதி என வலுவழந்தாலும், அதே இடத்தில் இருந்ததால் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் திருவாரூர், கடலூர், நாகை போன்ற மாவட்டங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் பாதிப்படைந்த நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

5 இலட்சம் நெற்பயிர்கள் சேதம்:

தமிழக வேளாண் அமைச்சர் கே.பி. அன்பழகன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். அதன்பின் கே.பி. அன்பழகன் கூறுகையில் ‘‘தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளனர். 1,10,344 விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். முழுமையாக ஆய்வு செய்த பின் நிவாரணம் (Relief Money) வழங்கப்படும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (CM Edappadi Palanisamy) மத்திய அரசிடம் இருந்து உரிய நிவாரணத் தொகையை பெற்றுத் தருவார்.

அடுத்தடுத்த இரு புயல்களால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை (Amount of compensation) விரைந்து வழங்க வேண்டும் என்பதே தற்போது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

உடன்பாட்டை மீறி விளைநிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்க முயற்சி! விவசாயிகள் கால்நடைகளுடன் போராட்டம்!

கடலூரில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களால் கவலையில் விவசாயிகள்! நிவாரணம் கிடைக்குமா?

 

English Summary: 5 lakh acres of paddy damaged by Purevi storm: Agriculture Minister informed!
Published on: 08 December 2020, 02:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now