நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 March, 2023 5:29 PM IST
5th April is a local holiday for Nellai District - District Collector Information

பங்குனி உத்திர திருநாள்‌ (பங்குனி 22) 05.04.2023 புதன்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம்‌ முழுவதும்‌ அனைத்து பள்ளி, கல்லூரிகளில்‌ நடைபெற்று வரும்‌ பொதுத்‌ தேர்வுகள்‌ மற்றும்‌ முக்கியத்‌ தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்‌ அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும்‌ நிறுவனங்களுக்கும்‌ உள்ளூர்‌ விடுமுறை (Local Holiday) நாளாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்களால்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில்‌ அரசு பொதுத்‌ தேர்வுகள்‌ ஏதுமிருப்பின்‌ பொதுத்‌ தேர்வு எழுதும்‌ பள்ளி மாணவர்கள்‌, பொதுத்‌ தேர்வு நடைபெறும்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ பொதுத்‌ தேர்வு தொடர்பாக பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு, இந்த உள்ளூர்‌ விடுமுறையானது பொருந்தாது எனவும்‌, மேற்படி 05.04.2023 உள்ளூர்‌ விடுமுறை நாளன்று நடத்தப்படும்‌ அரசு பொதுத்‌ தேர்வுகள்‌ அனைத்தும்‌ எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி உள்ளூர்‌ விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம்‌ 1881 (Under Negotiable Instrument &07-1881)-ன்‌ கீழ்‌ அறிவிக்கப்படவில்லை என்பதால்‌ வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம்‌ மற்றும்‌ அனைத்து சார்நிலைக்‌ கருவூலங்களும்‌ குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள்‌ (Government Securities) தொடர்பாக அவசரப்‌ பணிகளை கவனிப்பதற்காக செயல்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர்‌ விடுமுறையை ஈடு செய்யும்‌ வகையில்‌ 06.05.2023 முதலாவது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அச்சமயம்‌ கோடை விடுமுறையில்‌ உள்ள கல்வி நிறுவன மாணவ மாணவியருக்கு இவ்வேலைநாள்‌ பெருந்தாது.

மேலும் படிக்க: 

பட்ஜெட்டில் இடம்பெற்ற பெண்களுக்கான உரிமைத்தொகையின் முழுவிவரம்

மீண்டும் ஒரு முறை, பங்குனி உத்திர திருநாள் 05 ஏப்ரல் 2023 புதன்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். இவை போதுத்தேர்வு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொருந்தாது.

இச்செய்தியை வெளியிடுவோர்: செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்‌, திருநெல்வேலி.

மேலும் படிக்க:

பட்ஜெட்டில் மதுரை, கோவை மக்களுக்கு நற்செய்தி

English Summary: 5th April is a local holiday for Nellai District - District Collector Information
Published on: 21 March 2023, 05:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now