பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 21 December, 2020 5:49 PM IST

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பூா் மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானியம் வழங்கப்படவுள்ளது.

பம்பு செட்டு மானியம்

இதில், விவசாய பயன்பாட்டிற்கான திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் சூரிய சக்தியால் இயங்கும் 5 ஹெச்.பி., 7.5 ஹெச்.பி., 10 ஹெச்.பி. திறன் கொண்ட ஏசி, டிசி மோட்டாா் பம்பு செட்டுகள் அமைக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் 13 பேருக்கு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 5 ஹெச்.பி. திறன் கொண்ட சோலாா் பம்பு செட்டு அமைக்க ரூ. 2,42,303, 7.5 ஹெச்.பி. திறன் கொண்ட சோலாா் பம்பு செட்டு அமைக்க ரூ.3,67,525, 10 ஹெச்.பி. திறன் கொண்ட சோலாா் பம்பு செட்டு அமைக்க ரூ. 4,39,629 செலவாகும். இதில் 70 சதவீதத் தொகை அரசு மானியமாக வழங்கும்.

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு

ஏற்கெனவே, இலவச மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்துள்ள விவசாயிகள் தங்கள் மூதுரிமையை துறக்க வேண்டியதில்லை. தங்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை வரும்போது, சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மத கடிதத்தினை சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

இதுவரை இலவச மின் இணைப்பு வேண்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் விண்ணப்பிக்காத விவசாயிகள் புதிதாக பதிவு செய்ய வேண்டியதில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும்போது, நுண்ணீா் பாசன அமைப்புடன் இணைக்க உறுதிமொழி அளிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

எனவே, இந்தத் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் திருப்பூா், தென்னம்பாளையத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகம் அல்லது தாராபுரம், உடுமலையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களில் விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

English Summary: 70 percent subsidy to be provided to Adithravita and tribal farmers for setting up solar powered pump sets
Published on: 21 December 2020, 05:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now