News

Thursday, 26 May 2022 06:24 PM , by: T. Vigneshwaran

7th Pay Commission

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி 38% ஆக அதிகரிக்கும்.

மத்திய அரசு பணியாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி 38% ஆக அதிகரிக்கும். இந்த உயர்வின் பலனை ஊழியர்கள் பம்பர் சம்பள உயர்வாகக் காண்பார்கள். ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என இந்த பதிவில் விரிவாக காணலாம்.

மீண்டும் அதிகரிக்கும் அகவிலைப்படி

தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் ஜூலை மாதத்தில் அதிகரிக்கப்படலாம். ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் அகவிலைப்படி 4% அதிகரிக்கலாம் என்று மார்ச் மாதம் வந்த அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) மூலம் தெளிவாகியுள்ளது. .

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?

குறிப்பிடத்தக்க வகையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி 2022க்கான ஏஐசிபிஐ குறியீட்டில் சரிவு ஏற்பட்டது. ஏஐசிபிஐ குறியீட்டு எண்ணிக்கை ஜனவரியில் 125.1 ஆக இருந்தது. பிப்ரவரியில் இந்த குறியீடு 125 ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் அது 1 புள்ளி அதிகரித்து 126 ஆக உள்ளது. ஏப்ரல்-மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான எண்கள் இன்னும் வரவில்லை. இந்த எண்ணிக்கை 126க்கு மேல் சென்றால், அரசாங்கம் அகவிலைப்படியை 4% அதிகரிக்கக்கூடும்.

மத்திய அரசு கடைசியாக 2022 மார்ச் மாதத்தில் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியது. அப்போது, ​​அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நடவடிக்கையால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர்.

மத்திய அரசு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிஏ மற்றும் டிஆர் உயர்வு மீதான முடக்கத்தை நீக்கியது. அதன் பின்னர், ஊழியர்களின் அகவிலைப்படி பல சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்?

அரசு 4% அகவிலைப்படியை உயர்த்தினால், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 34% லிருந்து 38% ஆக உயரும். இப்போது அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு உயர்வு இருக்கும் என்பதை இங்கே காணலாம்.

மேலும் படிக்க

கரும்பு விவசாயிகளுக்கு பாதிப்பு, சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)