நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 December, 2021 5:41 PM IST
Credit : IndiaGlitz

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மூடப்பட்டப் பள்ளிகள் (Closed schools)

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் அரையாண்டுத் தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளை ஒட்டி ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்படுவது என்பது வாடிக்கையான ஒன்று.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 18 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தான் திறக்கப்பட்டன.

தேர்வு இல்லை (No Exam)

அதிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தான் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதனால் குறிப்பிட்ட பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க முடியாத சூழலில் ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாடங்கள் நடத்திமுடிக்கப்படாததால், காரணமாக அரையாண்டுத்தேர்வு இந்த ஆண்டு நடைபெற வில்லை.

9 நாள் விடுமுறை (9 days holidays)

இருப்பினும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு சம்பந்தமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததால், மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளது.

சுழற்சிவகுப்புகள் ரத்து (Cancel rotation class)

மேலும் மாணவர்களின் எதிர்காலம் கருதி, ஜனவரி 3ஆம் தேதி முதல் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களும் சுழற்சி முறை வகுப்புகள் இன்றி வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

3 முதல் 6ஆம் வகுப்பு வரை - பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை!

கடற்கரைப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை- தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு!

English Summary: 9 days consecutive holidays for schools?
Published on: 14 December 2021, 05:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now