நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 August, 2022 8:20 AM IST

பிரதமர் தற்போதுபயன்படுத்தும்  காருக்கு பதிலாக புதிய மின்சார காரை வாங்க பிரதமர் அலுவலகம் தற்போது திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே மத்தியில் ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனம்

இந்தியாவில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பிரதமருக்காக பயன்படுத்தப்படும் சொகுசு காருக்கு பதில் எலெக்ட்ரிக் கார் வாங்க பிரதமர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

தற்போது, பிரதமர் மோடி, உலகில் அதிக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களைப் பெற்றிருக்கும் மெர்சிடஸ் பென்ஸ் மேபேச் எஸ்650 (Mercedes Benz Maybach S650) காரை பயன்படுத்தி வருகிறார். இதற்கு முன்பாக பிரதமர் மோடி மிகவும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 சீரிஸ் மற்றும் பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட உயர்-பாதுகாப்பு ரேஞ்ச் ரோவர் வோக் ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

புதிய கார்

இந்நிலையில் தற்போது பிரதமரின் டிற்காக வாங்க புதிய காரை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அது என்னமாதிரியான பாதுகாப்பு சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் எந்த நிறுவனத்தைச் சேர்ந்த காராக இருக்கும் என எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது.அதுமட்டுமல்லாமல், தற்போது பயன்படுத்தி வரும் சொகுசு கார், விஆர்10 அளவிலான பாதுகாப்பை வழங்குவதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது.அதாவது ஏகே 47 துப்பாக்கி தோட்டாக்கள் மூலம் 15 கிலோ டிஎன்டி குண்டு வெடிப்பைத் தாங்கும். இது தவிர விஷவாயு தாக்குதல், உயிரி ஆயுத தாக்குதல் உள்ளிட்டவைகளிலிருந்தும் இருந்தும் பாதுகாக்கும்.

மெர்சிடஸ் பென்ஸ் இகியூஎஸ்

பிரதமர் அலுவலகம் வாங்க இருக்கும் புதிய இவி காரில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.அதன்படி, மெர்சிடஸ் பென்ஸ் இகியூஎஸ் (Mercedes Benz EQS) தேர்வாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எலக்டிரிக் பிராண்டு இன்னும் வரவில்லை என்றாலும், விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

உயர் சவாரி

இது EQS செடான் டைப் காராகும். அதுமட்டுமல்லாமல், உயர் சவாரி எஸ்யுவி பாடி ஸ்டைலில் தொகுக்கப்பட்ட S-வகுப்பு தர ஆடம்பர காராகும். பிரதமர் பயன்படுத்திய முந்தைய கார்களைப் விட அதிக தொழில்நுட்ப வசதிகளும், மேம்படுத்தப்பட்ட அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது.

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

English Summary: A new electric car to be bought for the Prime Minister!
Published on: 07 August 2022, 08:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now